×

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது

திருப்பூர், மார்ச் 31: திருப்பூர் ஊத்துக்குளி மேட்டுக்கடை அருகே அம்மணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கோவிலின் உண்டியலை உடைத்து மூன்று பேர் பணத்தை திருடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் கோவிலை சுற்றி வளைத்து கோவிலில் உண்டியலை உடைத்து திருடிய 3 நபர்களை பிடித்து ஊத்துக்குளி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஊத்துக்குளி ஆர்.எஸ் பகுதியை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (18), கோவிந்தசாமி (18) மற்றும் 17 வயதுடைய சிறுவன் என்பதும் கோவில் உண்டியலை உடைத்து ரூ.140 பணம் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஊத்துக்குளி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரூ.140 பறிமுதல் செய்தனர்.

The post கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Ammani ,Amman Temple ,Oothukuli Mettukadai ,
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி